Tuesday, January 29, 2013

இல்ல‍ற வாழ்வினை சீர்குலைக்கும் மலட்டுத் தன்மை!!


தம்பதியர்களை பூதாகரமாக பயமு றுத்திக் கொண்டிருக்கிறபிரச் னை மலட்டுத்தன்மை.. இப்பிரச்னைக்கா ன தீர்வுகள், அன்றாட வாழ்க்கையில் நாம் அலட்சியம் செய்கிற, அவமதி க்கிற சின்னச் சின்ன விஷயங்களில் இருக்கிறது என்றால் நம்புவீர்க ளா?

உடல் சூடு அதிகமாக இருப்பதே கருத் தரிக்காமைக்கான முதல் கார ணம். பெண் உடலில் காரத்தன்மை குறைந்து, அமிலத்தன்மை அதிக மானால், ஆணிடமிருந்து பெற்ற உயிரணு, அந்த அமில உடலில் வா ழ முடியாமல் போகிறது. அதாவது அதிகமான அமிலத் தன்மையால் கர்ப்பப்பையானது கொதிகலனாக மாறுகிறது. கொதிக்கிற தண்ணீ ரில் ஓர் உயிர் எப்படி வாழும்? உட லைக் குளிர்ச்சியாக வைத்துக் கொ ள்ளத்தான் அந்தக் காலத்தில் எண்ணெய் குளியல் பின் பற்றப் பட்டது. இன்றோ… அதெல்லாம் பட்டிக்காட்டுத்தனம்!
நாகரிக மோகத்தில் நாம் கைவிட்ட நல்ல விஷயங்களில் இதுவும்ஒன்று. எண்ணெய் குளியல் என்றால் அதற்கென ஒரு முறை உண்டு. 1 குழிக் கர ண்டி நல்லெண்ணெயில் 1 டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் புழுங்கலரிசி, 2 பல் பூண்டு சேர்த்துக் காய்ச்சி, வடிகட்ட வும். அதைத் தலை, தொப்புள், அடி வயி று, கால் கட்டை விரல் என உச்சி முதல் பாதம் வரை தடவி, அரை மணி நேரம் ஊறவும். பிறகு ஷாம்பு குளியல் எல்லாம் வேலைக்கு ஆகாது. பஞ்சகற்பம் (கடுக்காய் தோல், நெல்லி வற்றல், வேப்பம் விதை, வெள்ளை மிளகு, கஸ்தூரி மஞ்சள் ஆகியஐந்தும் சேர்த்தரைத்த பொடி ) சிறிது எடுத்து, பசும்பால் விட் டுக் கலந்து, தலைக்குத் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
கர்ப்பப்பை என்பது மண் என்றால், விந்து என்கிற விதை அதில் விழு ந்து, வளர மண் வளமாக இருக்க வேண்டுமில்லையா? மண் உவர்ப் புத்தன்மையுடன் இருந்தால், விதை , துளிர்க்காது. உடலை சுத்தமாகவும் குளிர்ச்சியாகவும் வைத் திருக்க இன்னொரு அவசிய சிகிச்சை உண்டு. 50 மி.லி. விளக்கெண் ணெயை, 25 மி.லி. நீராகாரத்துடன் கலந்து, காலையில் வெறும் வயிற் றில் குடிக்க வேண்டும். இது இயற் கையான பேதி மருந்து. 6 மாதங்களு க்கொரு முறை இப்படிச் செய்தால், ஒட்டுமொத்த உட லும் சீராகும்.
நீங்கள் அணிகிற உடைக்கும், உங்க ள் கர்ப்பம் தரிக்கிற தன்மைக்கும் தொடர்புண்டு என்றால் நம்புவீர்க ளா? ‘கூபகப் பகுதி’ எனப்படுகிற இடுப்பெலும்புப் பகுதி இடர் இல்லா மலும், காற்றோட்டமாகவும் இரு க்க வேண்டும் என்றுதான், அந்தக் காலத்தில் பாவாடை, புட வை போன்ற உடைகள் பெண்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டன. பாவாடையின் மடிப்பும், புடவையின் கொசுவமும், கூபக அறைக்கு, திரைச் சீலை மாதிரி பாதுகாப்பு தரும்படி வடிவமைக்கப்ப ட்டவை. கர்ப்பப்பை மற்றும் பெண் உறு ப்பின் இயற்கைத்தன்மையை பாதிப்பது டன், கருத்தரிக்காமல் செய்வ தற்கும், ஜீன்ஸ் பேன்ட், டிரவுசர் போன்ற  நவீன உடைகள் காரணம் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி.
அடுத்ததாக குதிகால் உயர்ந்த காலணிகள். குதிகாலை உயர்த்தி,விரல் பகுதியை அழுத்தியபடி நடக்க வைக்கிற அக்காலணிகளைத் தொடர் ந்து அணிவதால், கர்ப்பப்பையானது, கருவாயின் வழியே கீழ் நோக்கி சரியத் தொடங்கும். விந்து தங்காதபடியான ஒரு வடிவமை ப்பை தானே ஏற்படுத்தி விடும். ஆரம்பத்தில் குழந்தையின்மை க்குக் காரணமாகிற இச்சின்ன விஷய ம், பிற்காலத்தில், கர்ப்பப்பை அடித்தள் ளல் பிரச்னை வரை கொண்டு போய் விடும். இன்றைய பெண்களில் எத்தனை பேருக்கு மஞ்சள் பூசிக்குளிப்பது தெரியு ம்? ஹார்மோன் இம்பேலன்ஸ் எனப்படுகிற கோளா றுகளை ஓட ஓட விரட்ட வைப்ப தில், மஞ்சளின் மகிமை பற்றி அவர்களுக்குத் தெரிய வாய்ப் பில்லை.
தோலில் தடவும் மஞ்சள்தான். குறிப்பாக, உள் உறுப்புகளில் தடவு வதன் மூலம், ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவி க்கக் கூடிய தொற்றுக் கிருமிகள் தவிர்க்கப்படும். ஹார்மோன் கோளாறு கள் சரியா கும். அதன் காரணமாக தடைப்பட்டுப் போன கர்ப்பம் கை கூடும். களி ங்காதி எண்ணெய், ஆற்றுத்தும்மட்டி எண்ணெ ய் என சித்தமருத்துவக் கடைகளில் கிடைக் கு ம். மாதவிடாயின் முதல் 3 நாள் கள், மருத்துவரின் ஆலோச னையு டன் இந்த எண்ணெயை சாப்பி  ட்டால், கருதங்கி நல்ல முறையி ல் வளரும்.
விளக்கெண்ணெய், வேப்ப எண் ணெய், சின்ன வெங்காயச் சாறு, மலைவேப்பிலைச் சாறு, ஆற்றுத் தும் மட்டி க்காய் சாறு – எல்லாவற் றையும் சம அளவு எடுத்துக் காய்ச்சி, மாத விடாயின் 3 நாள்களிலும் எடுத்துக் கொ ண்டால், கர்ப்பப்பை பலம் பெறும். பிசிஓடி எனப்படுகிற சினைப்பை நீர் கட்டிகளும், சாக்லெட் சிஸ்ட் பிரச்னையும் தன்னால் நீங்கி, கர்பம் தங்கும். சினைப்பையி ல் இரு ந்து சினைமுட் டையானது, கர்பப்பை க்கு முதிர்ந்த நிலை க்குக் கொண்டு செல்ல வும் உதவும். மழலை யை ‘செல்வம்’ என்று தான் சொல்கிறோம். மெனக்கெடாமல் எந் தச் செல்வமும் சும்மா வந்துவிடுமா? மெனக் கெட்டுத்தான் பாருங் களேன்!
நன்றி => இளமை
Download As PDF

No comments:

Post a Comment